கணவன் என்றும் பாராமல் வெட்டிக் கொன்ற மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

1239

நாகை….

நாகை மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள திருக்கண்ணபுரம் பகுதியை சோ்ந்தவர் 50 வயதான கூலிதொழிலாளி அரவிந்தன். ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார்.

இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் மகன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பும், மகள் பத்தாம் வகுப்பும்படித்து வருகின்றனர். இவர்களுடன் தொழிலாளியின் மாமியாரும் வசித்து வந்தார்.

மகளுக்கு பாலியல்தொல்லை கொடுக்க முயற்சி தொழிலாளி தினமும் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து சென்று விற்பனைசெய்து அதில் கிடைக்கும் பணத்தில் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி, மாமியார், குழந்தைகளைதாக்கி வந்துள்ளார். இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த தொழிலாளி, தான் பெற்ற மகள் என்றும் பாராமல்தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்துதட்டிக்கேட்ட அவரது மனைவி, மாமியார், மகனையும் அவர் தாக்கி உள்ளார். பின்னர் குடும்பத்தினரை அடித்துவீட்டில் இருந்து விரட்டி உள்ளார். இதை தொடர்ந்து அவரது மனைவி தனது தாயார் மற்றும் குழந்தைகளைஅழைத்துக்கொண்டு திருவாரூரில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு சென்று விட்டார்.

மகளுக்கு பாலியல்தொல்லை கொடுக்க முயன்ற தனது கணவர் மீது ஆத்திரத்தில் இருந்த அவரது மனைவி மகன் மற்றும் அக்காள், அவரது கணவர், மகன், நண்பர் ஆகிய 6 பேரும் நள்ளிரவில் மீண்டும் தனது கணவர் வீட்டுக்கு வந்து வீட்டின்வாசலில் தூங்கி கொண்டிருந்த தொழிலாளியை அரிவாளால் சரமாரியாக வெட்டியும், உருட்டுக்கட்டையால்தாக்கியும் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார்சம்பவ இடத்துக்கு சென்று தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசுமருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கண்ணபுரம்போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியின் மனைவி, மகன் மற்றும் மனைவியின் அக்காள், அவரதுகணவர், மகன், நண்பர் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.