கணவரை கொலை செய்த வழக்கு : இளம்பெண்ணுக்கு பெருகும் ஆதரவு!!

648

சூடான் நாட்டில் பலாத்காரத்திற்கு முயன்ற கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இளம் பெண்ணுக்கு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் கணவரை கொலை செய்த குற்றத்திற்காக 19 வயதான Noura Hussein என்ற இளம் பெண்ணுக்கு கடந்த மே மாதம் மரண தண்டனை விதிக்கப்பது.

ஆனால் அதன் அடுத்த மாதம் குறித்த தண்டனையை ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக 5 ஆண்டுகள் கடும் காவல் தண்டனையும் குறிப்பிட்ட தொகை அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த நிலையில் குறித்த இளம் பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை ரத்து செய்து அவரை மன்னித்து விடுவிக்குமாறு தற்போது மனித உரிமை ஆர்வலர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் சூடான் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், Hussein-கு ஆதரவாக அரசுக்கு கடிதங்கள் அனுப்ப வேண்டும் எனவும் மனித உரிமை ஆர்வலர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

16 வயது இருக்கும்போது குடும்பத்தாரால் கட்டாயப்படுத்தி Hussein-கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாயமான Hussein, அவரது உறவினர் குடியிருப்பு ஒன்றில் 3 ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், குடும்பத்தாரின் ஆசை வார்த்தைக்கு கட்டுப்பட்டு Hussein சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளார்.

இதனிடையே குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் தம்மை பலாத்காரம் செய்ய முயன்ற கணவரை Hussein கொலை செய்தார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட Hussein-கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சூடானில் எழுப்பப்பட்டு வருகிறது.