கண்முன்னால் தோழிக்கு ஏற்பட்ட கொடுமை : ஆண் நண்பர் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

1112

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இளம்பெண்ணை, அவரின் ஆண் நண்பரின் கண்முன்னே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பால் பகுதியில் கடந்த வாரம் ஸ்வான் மற்றும் அவரின் பெண் தோழி என இருவரும் கடைவீதிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது, இரண்டு நபர்கள் வழிமறித்து செல்போன், பணம் போன்றவற்றை வழிப்பறி செய்துள்ளனர். அதன்பின்னர், ஸ்வானை அடித்துக் காயப்படுத்தியுள்ளனர்.

மட்டுமின்றி அவர் கண் முன்னே பெண் தோழியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மறுநாள் காலை, மருத்துவமனையிலிருந்தபடி பாதிக்கப்பட்ட பெண், காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையில் குறித்த சம்பவத்தால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஸ்வான், தன்னுடைய வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட ஈஸ்வர் தாஸ், கன்வர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து,போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஸ்வானின் பெற்றோர், என் மகன் மிகவும் சென்சிட்டிவானவன். அவனால் அங்கு நடந்த கொடுமையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

வீட்டுக்கு வந்தும், ‘என்னால் தோழியைப் பாதுகாக்க முடியவில்லையே’ என அழுதான். ஆனால், இப்படித் தற்கொலை செய்துகொள்வான் என எதிர்பார்க்கவில்லை’ எனக் கதறினர்.