கனவுகளுடன் பரீட்சைக்கு சென்ற மாணவி : அதிகாரிகள் அலட்சியத்தால் நொடியில் போன உயிர்!!

394

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ரயில்வே தேர்வுக்கு சகோதரருடன் பைக்கில் சென்ற மாணவி, பேருந்துக்கு அடியில் சிக்சி பரிதாபமாக உ யிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

தலைநகர் ஐதராபாத்தின் நல்கொண்டா சாலையில் காலை 7:30 மணிக்கு இக்கோர விபத்து நடந்துள்ளது.

உ யிரிழந்த மாணவி சைதாபாத்தில் வசிக்கும் 23 வயதான கல்லூரி மாணவி காவ்யா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்தன்று ரயில்வே தேர்வு எழுத மாணவி காவ்யா, தனது சகோதரன் சிவன் சாயுடன் பைக்கில் சென்றுள்ளார்.

நல்கொண்டா மேம்பாலத்திற்கு கீழ் சாலையில் ஒரு தனியார் பேருந்தை இடதுபுறமாக முந்திச்செல்ல சிவன் முயற்சி செய்துள்ளார்.

ஆனால், முன்னால் மோசமான சாலை கண்ட அவர், அதைத் தவிர்ப்பதற்காக பிரேக் போட்டுள்ளார்.

ஆனால், எதிர்பாராத விதமாக வாகனம் சறுக்கி அவரும் பின்னால் பயணித்த சகோதரியும் வலதுபுறமாக கீழே விழ பேருந்து காவ்யா மேல் ஏறிச்சென்றுள்ளது. தனியார் பேருந்து ஓட்டுநர் உடனே வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

அவர்கள் இருவரும் தலைகவசம் அணியவில்லை. இதில், சிவனுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது, ​​காவ்யாவின் தலை பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்துள்ளார்.

விபத்து குறித்து பொலிசார் கூறியதாவது, ​அவர்கள் இருவரும் உஸ்மானியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அந்த பெண் சம்பவ இடத்திலேயே இ றந்துவிட்டார். அவரது சகோதரர் சிறிய காயங்களுடன் தப்பியுள்ளார் என கூறினர்.

சாலையின் பராமரிப்பிற்கு பொறுப்பான அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரிய காவ்யாவின் குடும்பத்தின் பொலிசாரை அணுகியுள்ளனர்.

304 பிரிவின் கீழ் பேருந்து ஓட்டுநர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து அவரைக் காவலில் எடுத்துள்ளது.

இருப்பினும், சாலையின் மோசமான நிலைக்கு பொறுப்பான பெருநகர ஐதராபாத்தின் மாநகராட்சியின் அதிகாரியை பொலிசார் இன்னும் அடையாளம் காணவில்லை.