கர்ப்பம் என்று 7 மாதமாக இளம்பெண்ணுக்கு சிகிச்சை! ஸ்கேனில் வெளியான உண்மை!!

333

தமிழகத்தில்…….

தமிழகத்தில் நீர்க்கட்டியால் அவதிப்பட்ட பெண்ணை கர்ப்பமாக இருப்பதாக கூறி சிகிச்சையளித்து வந்த ஆரம்ப சுகாதார நிலைய ம ருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சந்திரப்பட்டியை சேர்ந்தவர் வேடியப்பன், இவரது மனைவி அஸ்வினி.

கடந்த மார்ச் மாதம் அஸ்வினி அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளார், அங்கே அவரை பரிசோதித்த ம ருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

இதை கேட்ட தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், இந்நிலையில் கடந்த 7 மாதங்களாக அஸ்வினிக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 19ம் திகதி க டும் வ யிற்றுவலியால் அவதிப்பட்ட அஸ்வினி, ம ருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கே அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது, க ர்ப்பமாக இல்லை என்பதும், நீர்க்கட்டி என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து குறித்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று கேட்டதற்கு, தெரியாமல் தவறு நடந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதனைதொடர்ந்து அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அஸ்வினியின் உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.