கல்லூரி முன்பு மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞரின் வெறிச்செயல்!!

883

இளைஞரின் வெறிச்செயல்

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் காதலிக்க மறுத்ததால் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவரை பொலிசார் கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம் வரங்கல்லை அடுத்த ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ரவளி. தனியார் கல்லூரி ஒன்றில் 3ஆம் ஆண்டு படித்து வந்த இவரை, சங்கம் கிராமத்தைச் சேர்ந்த சாயி அன்வேஷ் என்ற அதே கல்லூரியைச் மாணவர் காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

ஆனால், ரவளி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று கல்லூரி நுழைவு வாயில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சாயி அன்வேஷ் தான் பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை ரவளி மீது திடீரென்று ஊற்றினார்.

பின்னர் சிகரெட் லைட்டரை தீயை பற்ற வைத்து ரவளி மீது வீசிவிட்டு ஓடிவிட்டார். இதனால் ரவளியின் உடலில் தீப்பற்றியது. வலியால் அலறித் துடித்த அவரை மீட்ட மாணவர்கள், தீயை அணைத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தப்பியோடிய சாயி அன்வேஷை விரட்டி பிடித்த சில மாணவர்கள், அவரை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.