கள்ளக்காதலி எனக்கு மட்டும்தான்… அடம் பிடித்த வாலிபருக்கு காவலரால் நேர்ந்த கொடூரம்!!

273

சென்னையில்…

சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞரை ஆட்டோவில் கடத்தி சென்று எரித்து கொலை செய்த வழக்கில் காவலர் உள்பட இருவர் நெல்லை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

சென்னை கே.கே.நகரை சேர்ந்த ரவி (26) என்பவர் கடந்த மாதம் 30ம் தேதி வீட்டில் இருந்தபோது திடீரென மாயமானார். இதுகுறித்து ரவியின் மனைவி ஐஸ்வர்யா சென்னை கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் ரவி கொல்லப்பட்டதுடன் இந்த வழக்கில் காவலர் செந்தில் குமார் உள்ளிட்ட 5 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து செந்தில் குமாரின் கள்ளக்காதலி கவிதா என்பவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில் கவிதா கூறியதாவது, செந்தில் குமாருடன் நான் குடும்பம் நடத்தினேன்.

ரவிக்கும், எனக்கும் பழக்கமானது. இது செந்தில் குமாருக்கு தெரிந்து அவருடன் சண்டைப்போட்டார். பின்னர், சம்பவத்தன்று, ரவியை சமாதானம் பேசுவதற்கு, செந்தில் குமார் வீட்டிற்கு அழைத்தார், அங்கு மது அருந்திய ரவி, போதையில், அவள் என்ன உன் மனைவியா என சண்டைப்போட்டார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அவரை அடித்து உதைத்து கீழே தள்ளி, கழுத்தில் கால் வைத்து மிதித்து கொன்றார்.

பின்னர், அவரின் உடலை மூட்டையாக கட்டி, வீட்டை காலி செய்வது போல் வேனில் ஏற்றி, பழையனூர் நெடுஞ்சாலையில் வைத்து, உடலை துண்டாக்கி, பெட்ரோல் ஊற்றி எரித்தோம் என வாக்குமூலம் கொடுத்தார். செந்தில் குமார் செம்பியம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான காவலர் செந்தில்குமார்,

அவரது கூட்டாளிகள் ஐசக் எட்வின் உள்பட 5 பேரை தீவிரமாக தேடிவந்த நிலையில் செந்தில்குமார் மற்றும் ஐசக் இருவரும் இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஐசக் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்தவர் ஆவார். எனவே அவரது உதவியுடன் செந்தில்குமார் நெல்லைப்பகுதியில் தலைமறைவாகி இறந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் போலீசார் தன்னை நெருங்குவதை அறிந்த செந்தில் குமார் ஐசக் இருவரும் இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். இதையடுத்து இருவரையும் வரும் 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நெல்லை மாவட்ட இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆறுமுகம் உத்தரவிட்டார் மேலும், 16ஆம் தேதிக்குள் இருவரையும் செங்கல்பட்டு மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும் தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.