காதலியை மாணவர்கள் கண்முன் துடி துடிக்க வெட்டி கொலை செய்த இளைஞன் : 2 நாட்களுக்கு பின் எடுத்த விபரீத முடிவு!!

905

விபரீத முடிவு

தமிழகத்தில் ஒரு தலைக் காதலால் காதலியை வெட்டி கொலை செய்த காதலன், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரம்யா. இவர் கல்லூரி படித்துக் கொண்டிருந்த போது ராஜசேகர் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

அதன் பின் ரம்யாவை பெண் கேட்டு ராஜசேகரின் குடும்பத்தினர் சென்ற போது, ஜாதியைக் சுட்டிக் காடி பெண் கொடுக்க மறுத்ததால், ஆத்திரத்தில் இருந்த ராஜசேகரன் ரம்யாவை கொலை செய்யும் நோக்கோடு இருந்து வந்துள்ளார்.

அதன் படி நேற்று முன்தினம் பள்ளியில் மாணவர்களுடன் ரம்யா பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று உள்ளே நுழைந்த ராஜசேகர் அவரை துடி துடிக்க வெட்டி கொலை செய்தார்.

இந்த சம்பவத்தையடுத்து பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காதலன் ராஜசேர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தொப்பையால் குளம் முந்திரிக்காட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.