கேரளாவில் காணாமல் போன மாணவி தமிழ்நாட்டில் எரித்துக் கொலை!!

716

கேரளாவில் காணாமல் போன மாணவி ஒருவர் காஞ்சிபுரத்தில் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற நோக்கில் விசாரணை நடத்த கேரள போலீசார் காஞ்சிபுரம் வருகின்றனர்.

கேரளா மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் பகுதியில் தன் தந்தை மற்றும் சகோதரனுடன் இருந்தவர் ஜேசா. இவர் கேரளாவில் உள்ள காஞ்சிரப்பள்ளியில் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஜேசா உள்ளூர் மக்களால் முக்கு தட்டு பேருந்து நிலையத்தில் கடைசியாக மார்ச் 22ம் திகதி பார்க்கப்பட்டார். அதன் பின் மாயமான ஜேசாவை பத்தானம் திட்டா போலீசார் தேடி வருகின்றனர்.

50 நாட்கள் ஆன பின்னும் இவ்வழக்கில் முன்னேற்றம் ஏற்படாததை அடுத்து ஜேசாவை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 2 லட்சம் பரிசு தொகை அறிவித்தது கேரளா அரசு.

இதற்கிடையில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகில் உள்ள பழவேலி பகுதியில் பெண் ஒருவர் எரித்து கொல்லப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் போலீசாரிடம் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செங்கல்பட்டு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கேரளாவில் காணாமல் போன ஜேசாவின் அங்க அடையாளங்கள் சில இறந்த சடலத்துடன் ஒத்து போவதால் அது ஜெசாவாக இருக்கலாம் எனக் கருதிய காஞ்சிபுரம் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி கேரளா காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படியில் கேரளா போலீசார் செங்கல்பட்டு வந்து விசாரணை மேற்கொள்கின்றனர்.

50 நாட்களாக பதிலேதும் கிடைக்காத மாணவி ஜேசா வழக்கு தற்போது ஏற்பட்டுள்ள திருப்பு முனையால் பரபரப்பாகியுள்ளது.