சாக்குமூட்டையில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம்!!

691

பெண்ணின் சடலம்

தமிழகத்தின் தாராபுரம் அருகே சாக்குமூட்டையில் கட்டப்பட்ட நிலையில் வீசப்பட்ட பெண்ணின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் நஞ்சியம்பாளையம் அருகே உப்பாற்றுப் பாலத்தின் கீழ் வீசப்பட்ட சாக்கு மூட்டையிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக அங்கு விரைந்த பொலிஸார், அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தை உடற்கூறு சோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட பண் பாலியல் வன்கொடுமைக்கு பின் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.