நான்கரை கோடி ரூபாய் கடனுக்காக தொழிலதிபரை கடத்துவதற்கு உதவிய பெண் மருத்துவர் : வெளியான திடுக்கிடும் தகவல்!!

1550

சென்னை….

சென்னை, தி நகர், ராமசாமி தெருவை சேர்ந்த தொழிலதிபர் சரவணன்(46). இவர், கடந்த 20ம் தேதி அன்று, மதியம் வீட்டில் இருந்தார். அப்போது ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்து, கத்தி முனையில், சரவணனை கடத்தியது. விலையுர்ந்த கார்களையும் எடுத்து சென்றனர்.

இதையடுத்து, மாம்பலம் போலீசுக்கு தகவல் கிடைத்து, சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, உடனடியாக , கடத்தப்பட்ட சரவணனை மீட்டனர். அத்துடன், கடத்தலில் ஈடுபட்ட மயிலாடுத்துறை, மாதா கோயில் தெருவை சேர்ந்த ஆரோக்கியராஜ் (42), கரூர், அரவக்குறிச்சியை சேர்ந்த அரவிந்தகுரு(23), திருப்பூர், முத்தனம்பாளையத்தை சேர்ந்த அப்ரோஸ் (23), மதுரை,

மீனாம்பாள் புரத்தை சேர்ந்த அஜய் (24), கே.புதூரை சேர்ந்த விஜயபாண்டி (25) மற்றும் கோயம்புத்தூர், காந்திபுரத்தைச் சேர்ந்த சிறைக்காவலர் நாகேந்திரன் (31) ஆகியோரை கைது செய்தனர்.

விநாயக சதுர்த்திக்கான பலவிதமான பொருட்களில் இருந்து தேர்வு செய்து, உங்கள் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் சேமித்து வைத்து, இந்த சதுர்த்தியை Amazon Fresh உடன் கொண்டாடுங்கள்

அவர்களிடம் இருந்து கார்கள், இரு சக்கர வாகனம், 7 மொபைல்போன்கள், ஆப்பிள் லேப் டாப், பொம்மை துப்பாக்கி, கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில், கிழக்கு கடற்கரையை சேர்ந்த மற்றொருவர் தலைமறைவாகி விட்டார். மேலும், கைதான ஆரோக்கியராஜிக்கு, சவுடு மணல் அள்ளுவதற்கான ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி, சரவணன், நான்கரை கோடி ரூபாய் வாங்கி ஏமாற்றி வந்ததால் அவரை கடத்தியது தெரியவந்தது.

இந்த நிலையில், நேற்று, அமிர்தா என்ற மருத்துவரை கைது செய்தனர். விசாரனையில், சரவணன், ஆரோக்கியராஜ் இருவரும் அடிக்கடி பப்புக்கு சென்று வந்தபோது அமிர்தா பழக்கமாகியுள்ளார்.

சரவணனிடம் தந்த பணத்தை எப்படி வாங்குவது என ஆரோக்கியராஜ் கேட்டபோது, அமிர்தாதான் பிளான் போட்டு கொடுத்துள்ளார். மேலும், கடத்தலுக்கு மூளையாக அமிர்தா செயல்பட்டதும் தெரிந்தது. அவரை கைது செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.