படித்துக்கொண்டே மீன் விற்று குடும்பத்தை காப்பாற்றிய மாணவி எடுத்த அதிரடி முடிவு!!

1064

மாணவி எடுத்த அதிரடி முடிவு

இணையம் மூலம் மீன் விற்பனை செய்ய, கல்லூரி படித்துக்கொண்டே மீன் விற்று குடும்பத்தை காப்பாற்றிய மாணவி ஹனன் ஹமீது முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடும்ப சூழல் காரணமாக கல்லூரியில் படித்துக்கொண்டே மீன் விற்பனை செய்து வந்த கேரள மாணவி ஹனன், தற்போது ஆன்லைனில் மீன் விற்க முடிவு செய்துள்ளார்.

இதுபற்றி அவர், உடல் நலம் இன்னும் முழுமை யாக குணமாகவில்லை. மீன்களை வாங்கி சுத்தம் செய்து, பிறகு இணையம் மூலம் அதை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளேன். வியாபார போக்குவரத்துக்காக வாகனம் ஒன்றையும் வாங்க இருக்கிறேன். இந்த பிசினஸூக்காக டெக்னிக்கல் ஆலோசனையையும் கோரியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஹனன் ஹமீது. இவர், அங்குள்ள கல்லுாரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு கெமிஸ்ட்ரி படித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஹனன், குடும்பத்தை காப்பாற்றவும் படிப்பு செலவுகளைச் சமாளிக்கவும் கல்லுாரி முடிந்த பின் மீன் விற்ப னை செய்து வந்தார்.

இவரது இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்தாலும் தன்னை பிரபலப்படுத்துவதற்காக, திட்டமிட்டு இதை செய்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது. இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகராவில் கடை திறப்பு நிகழ்ச்சியில், கடந்த 3 ஆம் திகதி ஹனன் பங்கேற்றார்.

நிகழ்ச்சி முடிந்து திருச்சூர் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, கொடுங்கல்லுார் என்ற இடத்தில் அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில், ஹனன் படுகாயம் அடைந்தார். அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு, முதுகு தண்டில் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடல் நலம் குணமாகி வரும் அவர், வீல் சேர் மூலம்தான் வீட்டுக்குள் சென்றுவருகிறார்.