பீடி சுற்றி படிக்க வைத்த தந்தை : ஏழ்மையிலும் சாதித்த மாணவி!!

761

ஏழ்மையிலும் சாதித்த மாணவி

திருநெல்வேலி மாவட்டத்தில் ஏழ்மையான நிலையிலும் மாணவி ஒருவர் தேர்வெழுதி வெற்ற பெற்றதன் மூலம் டிஎஸ்பியாக தெரிவாகியுள்ளார்.

முருகானந்தம் என்பவர் பீடி சுற்றும் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சரோஜா. 12 ஆம் வகுப்பு வரை மாநகராட்சி பள்ளியில் படித்த இவர், அதன்பிறகு மழலையர் கல்வி கற்பித்தல் குறித்த பயிற்சி எடுத்தார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுதிய நிலையில் தற்போது டிஎஸ்பியாக தேர்வாகி உள்ளார். ஏழ்மையான சூழலில் இருந்ததால் தன் பணியில் நேர்மையாக இருப்பேன் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.