மனைவி, மகன்களை படுகொலை செய்த கணவன் : அதிர்ச்சி சம்பவம்!!

644

தமிழ்நாட்டில் குடிபோதையில் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களை படுகொலை செய்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகனை பொலிசார் தேடிவருகின்றனர்.

தஞ்சையின் அன்னப்பன்பேட்டை பகுதியில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்லப்பனின் மகன் ஜெயக்குமார் வசித்து வருகிறார்.

நேற்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஜெயக்குமார் தனது மனைவி அனிதாவை மண் வெட்டியால் வெட்டியுள்ளார்.

தனது தாயாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த 9 வயதான தினேஷ் மற்றும் 7 வயது தருண் ஆகியோரையும் ஜெயக்குமார் வெட்டியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்ந்த்தனர். படுகாயம் அடைந்த 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதையடுத்து தலைமறைவாக உள்ள ஜெயக்குமாரை பொலிசார் தேடி வருகிறார்கள்.