மன்னித்துவிடுங்கள் அப்பா என கதறிய சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூர தந்தை!!

626

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மனைவியை பழி வாங்க தமது இரண்டு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார் கொடூர தந்தை ஒவுவர்.

குறித்த சம்பவத்தை அடுத்து மனைவிக்கு ஒரு கடிதமும் எழுதி வைத்துவிட்டு அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் கடந்த சனிக்கிழமை இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

தொடர்ந்து நடைபெற்ற பொலிஸ் விசாரணையில் Marcel Ndossoka தமது குற்றத்தை பொலிசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

8 வயது சிறுவன் மற்றும் அவனது இளைய சகோரதரி ஆன் பெல் ஆகிய இருவரையும் கதற கதற கொலை செய்துவிட்டு, பிரிந்து சென்ற தமது மனைவியை அழைத்து, பரிசு ஒன்று கருதியுள்ளதாகவும் வந்து பெற்றுச்செல்லவும் என தகவல் அளித்துள்ளார்.

மட்டுமின்றி பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றில், எங்கள் மூவரின் மரணத்திற்கும் காரணம் நீ தான். இந்த இழப்பின் பாரத்தை கடைசி வரை சுமப்பாய் என எழுதி வைத்துள்ளார்.

பின்னர் துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அதிற்ஷ்டவசமாக Ndossoka உயிர் பிழைத்துள்ளார்.

தற்போது தலையில் பட்ட துப்பாக்கி காயங்களில் இருந்து அவர் குணமடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளன.