ரயில் முன்பு குதித்து உயிரை விட்ட பெற்றோர் : அதிர்ச்சியில் மகள் செய்த செயல்!!

1294

இந்தியாவில் தந்தை, தாய் மற்றும் மகள் ரயில் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் குண்டூரை சேந்தவர் துங்கா வெங்ய்யா (45). இவர் மனைவி ரஜானி (39). தம்பதிக்கு கிருஷ்ண வேணி (19) என்ற மகளும், சாய் கோபினாத் என்ற மகனும் உள்ளனர்.

கிருஷ்ணவேணிக்கு அவர் பெற்றோர் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்த நிலையில் தான் வேறு நபரை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்யபோவதாகவும் அவர் கூறியுள்ளனர்.

ஆனால் குடும்ப கெளரவம் கருதி அதை ஏற்காத பெற்றோர் திருமணத்துக்கு கிருஷ்ணவேணி சம்மதிக்கவில்லை எனில் தாங்கள் தற்கொலை செய்வோம் என மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து மகளுடன் வெங்கய்யாவும், ரஜானியும் ரயிலில் பயணம் செய்த நிலையில் நடைமேடையில் இறங்கிய பின்னர் திடீரென ரயில் முன்பு வெங்கய்யாவும், ரஜானியும் குதித்துள்ளனர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணவேணியும் ரயில் முன்னால் குதித்த நிலையில் மூவரும் உயிரிழந்தார்கள்.

இதையடுத்து பொலிசார் மூவரின் சடலத்தையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெங்கய்யா குடும்பத்தில் தற்போது உயிருடன் இருக்கும் சாய் கூறுகையில், நான் பெற்றோரை வெளியில் போகவேண்டாம் என கூறினேன், அவர்கள் தவறான முடிவு எடுக்க மாட்டோம் என என்னிடம் கூறினார்கள். ஆனால் மனதை மாற்றி கொண்டு இவ்வாறு செய்துவிட்டார்கள் என கூறியுள்ளார்.