
வட பகுதிக்கு இந்த சூரிய கிரணம் முழுமையாக தென்படும் என அந்த மத்திய நிலையத்தின் உடுத்தொகுதிகள் பிரிவின் விசேட ஆய்வாளரான ஜனக அடஸ்சூரிய தெரிவித்துள்ளார். மன்னாருக்கு மேல்திசையில் உள்ள பகுதிகளில் இந்த நிலைமையை அவதானிக்க முடியும்.
இதற்கமைய, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு வவுனியா, திருகோணமலை முதலான மாவட்டங்களுக்கு இந்த சூரிய கிரகணம் முழமையாக தென்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். இதேநேரம், தென் பகுதியில் இந்த சூரிய கிரகணம் பகுதி அளவிலேயே தென்படும்.
குறிப்பாக, வவுனியாவுக்கு கீழ்திசையில் கொழும்பு, கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் காலி முதலான பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் பகுதி அளவிலும் தென்படும் என அவர் குறிப்பிடடுள்ளார். எதிர்வரும் 26ஆம் திகதி காலை வேளையில் இந்த சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்.