ஹெல்மட்டில் கொடிய விஷ பாம்பு இருப்பது தெரியாமல் 11 கிமீ இருசக்கர வாகனத்தில் பயணித்த ஆசிரியர்!!

1456

ஹெல்மட்டில்..

இந்திய மாநிலமான கேரளாவில் கொடிய விஷ பாம்பு தனது ஹெல்மட்டில் இருப்பது தெரியாமல், ஆசிரியர் ஒருவர் 11 கிமீ தூரம் வரை இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார்.

கொச்சி அருகே வசிக்கும் பள்ளி ஆசிரியரான ரஞ்சித், புதன்கிழமை காலை 8.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு புறப்பட்டுள்ளார்.

11கிமீ தூரத்தை கடந்திருந்தபோது, அவரது ஹெல்மட்டிலிருந்து வால் ஒன்று தென்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனைடியாக இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, ஹெல்மட்டை கழற்றியுள்ளார்.

அதனுள், காமன் கிரெய்ட் என்று அழைக்கப்படும் மற்றும் உள்நாட்டில் ‘வலவலப்பன்’ அல்லது ‘வெல்லிகெட்டன்’ என்று அழைக்கப்படும் விஷப்பாம்பு ஒன்று அவரது தலையால் நசுக்கப்பட்டு இ றந்து கிடந்துள்ளது.

உடனே அவருடைய சகாக்கள் இரத்த பரிசோதனை உட்பட விரிவான பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் கடிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து ரஞ்சித், “என் வீட்டுக்கு அருகிலுள்ள குளத்திலிருந்து பாம்பு ஹெல்மட்டில் ஏறியிருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் நான் அதை அணியும்போது அசாதாரணமான எதையும் உணரவில்லை” எனக்கூறியுள்ளார்.