Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
இளம் காதல் ஜோடி ஐதராபாத் மாநிலத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் காதல் ஜோடி, அரசுப்பள்ளியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த கனகையா (21), தாரா (19) ஆகியோர் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த இருவரும் புதன்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். வியாழக்கிழமையன்று Lakudaram பகுதியில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியில்,...
அமெரிக்காவில் 9 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த இந்திய வம்சாவளி வளர்ப்பு தாயார் குற்றவாளி என கியூன்ஸ் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 55 வயதான ஷம்தாய் அர்ஜுன் என்பவரே தமது 9 வயதேயான வளர்ப்பு மகளை மிகவும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். கொல்லப்படுவதற்கு 3 மாதங்கள் முன்னரே அஷ்தீப் கவுர் தமது உறவினர்களுடன் பஞ்சாபில் இருந்து அமெரிக்காவின் கியூன்ஸ் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஷம்தாய் தொடர்ந்து சிறுமி...
தங்கையை முத்தமிட்ட நபர் சமீபத்தில் இணையத்தில் பிரபலமாவதற்காக தனது தங்கையின் உதடுகளில் முத்தமிட்ட ஒரு நபர் இம்முறை வைரலாவதற்காக தன் தாயின் உதடுகளில் முத்தமிட்டிருக்கிறார். கலிபோர்னியாவைச் சேர்ந்த Chris Monroe, இணையத்தில் பிரபலமாவதற்காக ஏடாகூடமான வீடியோக்களை உருவாக்கி வெளியிடுவது வழக்கம். இதற்குமுன் மார்ச் மாதம் தனது தங்கையின் உதடுகளில் Chris முத்தமிடும் ஒரு வீடியோவை அவர் வெளியிட்டார். அந்த வீடியோ உண்மையாகவே வைரலானது, அதை 7.3 மில்லியன் பேர் பார்த்தார்கள். அதனால் மீண்டும்...
கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து.. நிறைமாத கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து, அவருடைய வயிற்றை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மார்லன் ஓச்சோ-உரோஸ்டெகுய் (19) என்கிற ஒன்பது மாத கர்ப்பிணி பெண், கடந்த ஏப்ரல் 23ம் திகதியிலிருந்து மாயமாகியுள்ளார். அன்றைய தினம் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு போன் செய்த 46 வயது பெண் ஒருவர், தனக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்ததாகவும், அந்த குழந்தை எந்த அசைவும்...
தமிழ்நாடு - கேரளா செல்லும் ரயில்களில் நான்கு ஆண்டுகளாக திருடி வந்த கொள்ளையன் மலேசியாவில் சொந்த ஓட்டல் வாங்கி நிர்வாகித்து வந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கேரளா மாநிலம் திரிச்சூரைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்ற நபரே இக்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவம் குறித்து பேசிய ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன், ரயிலில் தொடர்ந்து கொள்ளையடித்து வந்த கொள்ளையன் பிடிபட்டுள்ளான். 4 ஆண்டுகளாக ரயில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த சாகுல் ஹமீதுவிடம்...
பரபரப்பு புகார் மாரடைப்பால் இறந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷின் மனைவி தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக, அவருடைய வீட்டு பணியாளர் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ் கடந்த மாதம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இந்த நிலையில் அவருடைய மனைவி மீது வீட்டில் வேலை செய்து வந்த கேசவன் என்பவர் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், "கடந்த 10 ஆண்டுகளாக ஜே .கே...
அதிரவைக்கும் வாக்குமூலம் தமிழகத்தில் கணவர் மற்றும் ஒரு வயது குழந்தையை கொன்று புதைத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா (25). இவரும் தீபிகா என்ற பெண்ணும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்த நிலையில் தம்பதிக்கு பிரனீஷ் (1) என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 13ம் திகதி முதல் தனது கணவர் மற்றும் குழந்தையை காணவில்லை என தீபிகா நேற்று பொலிஸ் புகார் அளித்தார்....
நபர் செய்த செயல் திருமணம் செய்வதாக ஆசை காட்டி விதவை பெண்ணிடம் ரூ.18¾ லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (34). சிவில் பொறியாளர். திருமணமான இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர், தன்னை மருத்துவர் என்று கூறியும், திருமணம் ஆகாதவர் என்றும் அஜய், விதுட், விஜயகுமார், கிரிஜா சரவணன் என பல பெயர்களில்...
கன்னித்தன்மை சோதனை திருமணத்துக்கு முன்பு பெண்ணின் கன்னித்தன்மையை சோதிக்கும் வழக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பம் ஒன்று சமூக புறக்கணிப்பு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விவகாரம் தொடர்பாக அந்த குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கஞ்சர்பாத் வகுப்பினரிடையே விநோத வழக்கம் இருந்து வருகிறது. அதன்படி புதிதாக திருமணம் செய்யவிருக்கும் பெண் திருமணத்துக்கு முன்பு தனது கன்னித்தன்மையை நிரூபிக்க வேண்டும். இந்த வகுப்பை சேர்ந்த...
பரிதாபமாக உயிரிழந்த பெண் கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற போது கடல் அலையில் சிக்கி இளம் பெண் மருத்துவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ரம்யா கிருஷ்ணா. மருத்துவரான இவர் கோவா அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை ரம்யா கிருஷ்ணா கடற்கரைக்கு சென்றார். அப்போது கடலை பின்புலமாகக் கொண்டு அவர் தமது செல்போனில் செல்பி எடுக்க முயன்ற போது திடீரென எழுந்த ராட்சத அலை...