Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
தமிழ்நாட்டில் கணவர் முன்னால் மனைவி மினிபஸ்சின் சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவர் மனைவி சுசீலா (42). ரெங்கராஜும், சுசீலாவும் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அந்த சாலையில் தார்ச்சாலை அமைக்கும் பணிக்காக ஜல்லிக்கற்கள் போடப்பட்டிருந்ததால் பைக்கை ரெங்கராஜ் மெதுவாக ஓட்டி சென்றார். அப்போது எதிரில் வந்த மினிபஸ் ஒன்று இவர்களின் பைக் மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பஸ்சின்...
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தை காணாமல் போனது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என நவநீதகிருஷ்ணன் என்பவர் பொலிசில் புகார் அளித்துள்ளார். நவநீதகிருஷ்ணன் யாஸ்மின் தம்பதியினருக்கு திருமணமாக ஒரு குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக யாஸ்மின் கர்ப்பமாகியுள்ளார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனியார் ஆய்வகத்தில் நடந்த பரிசோதனையில் யாஸ்மின் கர்ப்பமடைந்தது தெரிந்தது. தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களும் உறுதிப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை...
அமெரிக்காவில் கடந்த ஆறு ஆண்டுகளாக மென்பொருள் துறையில் பணியாற்றி வந்த தமிழகத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் மருத்துவ பெண்ணை காதலித்து தமிழக முறைப்படி திருமணம் செய்துகொண்டார். திருநாவுக்கரசு என்பவரும் அமெரிக்காவில் மருத்துவராக பணியாற்றி வந்த எலிசபெத் கல்லகரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். எலிசபெத் கல்லகர் மற்றும் அவரது பெற்றோர் தமிழ் முறைப்படி திருமணம் செய்ய விரும்பியதை அடுத்து முறைப்படி விசா பெற்று அவர்கள் குடும்பத்தினர் தமிழகம் வந்தனர். தருமபுரி மாவட்டம்...
மத்திய பிரதேசத்தில் காமுகர்களால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 14 வயது சிறுமியின் சத்தம் கேட்டு, அவரது வளர்ப்பு நாய் விரைந்து சென்று காப்பாற்றியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் அருகே உள்ள கரிலா என்ற கிராமத்தில், கடந்த வெள்ளிக்கிழமையன்று கொசுவை விரட்டுவதற்காக வைக்கோல் தேடி 14 வயது சிறுமி வெளியில் சென்றுள்ளார். சிறுமி தனியாக செல்வதை பார்த்த ஐஷு அஹிர்வார் (39), புனித் அஹிர்வார் (24) என்ற...
கேரளாவில் வெள்ளம் வடிந்தவுடன் தங்கள் வீட்டுக்கு சென்ற மக்கள் அங்கு பாம்புகள் இருப்பதை கண்டு பயத்தில் ஆழ்ந்துள்ளனர். கேரளத்தில் கடந்த 3 வாரங்களாக பெய்த மழையால் வெள்ள நீர் சூழ்ந்தது. இதையடுத்து தற்போது மழை நின்றுவிட்டதால் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. இதையடுத்து முகாம்களில் தங்கியிருந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். வீடுகள் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளிப்பதோடு, வீடுகளில் உள்ள களிமண்களில் பாம்புகள் காணப்படுகின்றன. மேலும் சில இடங்களில்...
கேரள வெள்ள நிவாரண பணிகளுக்காக பள்ளி மாணவி 2 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கியுள்ளது பாராட்டுகளை பெற்றுள்ளது. கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கரன், இவரது மகள் ஸ்வகா (16), தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கேரளாவில் பெய்த பலத்த மழை வெள்ளத்தால் பலகோடி இழப்பு ஏற்பட்டத்தையொட்டி அரசு பெரும் தொகை எதிர்பார்த்துள்ளது. கேரள முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு பல்வேறு இடங்களில் இருந்து நிதி அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகவல் ஸ்வகாவுக்கு தெரியவந்தது....
அலகாபாத்தில் பூட்டிய வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத் அருகே துமகன்ஞ் பகுதியை சேர்ந்தவர்கள் மனோஜ் குஷ்வாக- ஸ்வேதா தம்பதியினர். இவர்களுக்கு ப்ரீத்தி (8), சிவானி (6), ஸ்ரேயா (3) என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். 35 வயதான மனோஜ் நேற்று மாலை தன்னுடைய மனைவி மற்றும் மகள்களை கொலை செய்துவிட்டு தானும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை...
கேரள வெள்ளத்தில் திரைப்பிரபலங்கள் பலர் இங்கு உதவாமல் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர் என்று கூறப்பட்டதால், அவர்களுக்கு நடிகர் துல்கர் சல்மான் பதிலடி கொடுத்துள்ளார். கேரளாவில் பெரு வெள்ளத்தின் காரணமாக மூன்றில் ஒரு பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இதனால் அதை எல்லாம் சீரமைக்கும் பணியில் அம்மாநில அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக அனைவரிடமும் கேரளா தொடர்ந்து உதவி கேட்டு வருவதால், அம்மாநிலத்திற்கு உதவிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் இந்த வெள்ளத்தின் காரணமாக...
கர்ப்பமுற்றிருக்கும் உலகின் முதல் ஆணின் புகைப்படம் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Thomas Beatie (44) பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்தவர், பின்னர் திருநம்பியானார். வெளிப்படையாக அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆணாக மாறினாலும் தனது கர்ப்பப்பை முதலான உள்ளுறுப்புகளை அவர் அகற்றவில்லை. இதனால் செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் கருவுற்ற அவர் இது வரை மூன்று குழந்தைகளைப் பெற்றுள்ளதோடு, தற்போது நான்காவது முறையாக கருவுற்றிருக்கிறார். முன் தள்ளிய வயிற்றுடன் அவர் நிற்கும் புகைப்படத்தைப் பார்த்து...
இரண்டு வயது குழந்தையை வாஷிங் மிஷினில் அடைத்து வைக்கப்பட்டதால், அந்த குழந்தையை கதவை திறக்கும் படி கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலாந்தைச் சேர்ந்தவர் Zaneta D(21) இவரது கணவர் அங்கிருக்கும் Radom பகுதியில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 வயதில் Kacper என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்த குழந்தையை பார்த்துக் கொள்ளும் நபர், வாஷிங் மிஷினுள் அடைத்து வைத்து துன்பப்படுத்தியுள்ளார்....