Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
குழந்தை இல்லாமைக்கு சிகிச்சை எடுக்கும் தம்பதிகளில் உள்ள ஆண்களுக்கு மன அழுத்தம் இருந்தால், கருத்தரிப்பு வாய்ப்பு மிகவும் குறைவதாக, ஒரு ஆய்வில் தெரியவந்து உள்ளது. இந்த ஆய்வின்படி, தம்பதிகளில் அதிக அளவு மனஅழுத்தம் இல்லாத ஆண்களால் கருத்தரிப்பு மற்றும் குழந்தை பிறப்பு நிகழ்வதை விட, அதிக அளவு மனஅழுத்தம் கொண்ட ஆண்களால் கருத்தரிக்கும் வாய்ப்பு 60 சதவீதம் வரை குறைவதாக தெரியவந்து உள்ளது. மற்றொருபுறம், பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் எந்த வகையிலும்...
தமிழகத்தில் விடுமுறை தராத காரணத்தினால் பொலிசார் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் மோகன். திருப்பூர் மாநகர காவல் ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் இவருக்கு மனைவியும் 3 மாத குழந்தையும் உள்ளனர். மோகன் பொலிஸ் அதிகாரியாக வேலை பார்த்து வருவதால், அவர் மட்டும் திருப்பூரில் சிறுபூலுவப்பட்டி என்ற பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று மோகன், வஞ்சிபாளையம் அருகே உள்ள...
இயக்குநர் செல்வம் சுப்பையா உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். ராமேஸ்வரம் படத்தின் இயக்குநரான செல்வம் சுப்பையா, “வெளிநாடுகளில் வாழும் ஈழத்து உறவுகளுக்கும், உலகத்தமிழ் உறவுகளுக்கும் ‘ராமேஸ்வரம்’ (யாழ்ப்பாணத்தில் இருந்து முப்பத்தாறு மைல்) திரைப்படத்தின் இயக்குநரான நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். ஈழத்தில் நமது உரிமைக்காக நாம் யுத்தம் செய்தபோது, நமது யுத்தத்தை ஆதரித்தும், சிங்களர்களை எதிர்த்தும் தமிழகத்தில் பலர் தங்களின் உயிரை தாங்களே மாய்த்துக் கொண்டனர். இந்தியத்...
அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்த மகனை காப்பாற்ற தாய் ஒருவர் போராடி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ரூம்பா பானர்ஜி. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசித்து வரும் இவருக்கு அரீன் சக்ரவர்த்தி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 14-ஆம் திகதி இவர்களின் வீடு திடீரென்று தீ விபத்தில் சேதமடைந்தது. அப்போது வீடு எரிவதைக் கண்ட அரீன் சக்ரவர்த்தி நெருப்பின் பிரம்மிப்பை கண்டு அதை நெருங்கி போனதால் புகை...
பிரபல சின்னத்திரை நடிகையான சங்கீதாவை பொலிசார் பாலியல் வழக்கில் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனியார் ரிசார்டில் பாலியல் தொழில் நடப்பதாக சென்னை பாலியல் தொழில் தடுப்பு பிரிவு பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் ரிசார்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு பல சின்னத்திரை நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பின் பொலிசார் நடத்திய விசாரணையில், வாணி ராணி...
வேலூர் கோட்டை வளாகத்தை திறந்தவெளி பாராக மாற்றியதுடன், போதையில் கோட்டை மேல் நின்று கும்மாளமடித்த கல்லூரி மாணவிகளை பார்த்து சுற்றுலா பயணிகள் முகம் சுளித்தனர். கலி முத்தி போச்சு என்று நாகரீகத்தின் பேரால் நடக்கும் அநாகரீக சம்பவங்களை பார்த்து நமது பெரியவர்கள் அலுத்துக் கொண்ட வரத்தைகளை உதிர்ப்பதுண்டு. அதேபோன்ற ஒரு சம்பவம் வேலூர் கோட்டை வளாகத்தில் நடந்து, அது வீடியோ காட்சிகளாக வாட்ஸ்அப், முகநூல் மூலம் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய...
இந்தியாவில் தந்தை, தாய் மற்றும் மகள் ரயில் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் குண்டூரை சேந்தவர் துங்கா வெங்ய்யா (45). இவர் மனைவி ரஜானி (39). தம்பதிக்கு கிருஷ்ண வேணி (19) என்ற மகளும், சாய் கோபினாத் என்ற மகனும் உள்ளனர். கிருஷ்ணவேணிக்கு அவர் பெற்றோர் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்த நிலையில் தான் வேறு நபரை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்யபோவதாகவும் அவர் கூறியுள்ளனர். ஆனால்...
கேரளாவில் காணாமல் போன மாணவி ஒருவர் காஞ்சிபுரத்தில் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற நோக்கில் விசாரணை நடத்த கேரள போலீசார் காஞ்சிபுரம் வருகின்றனர். கேரளா மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் பகுதியில் தன் தந்தை மற்றும் சகோதரனுடன் இருந்தவர் ஜேசா. இவர் கேரளாவில் உள்ள காஞ்சிரப்பள்ளியில் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஜேசா உள்ளூர் மக்களால் முக்கு தட்டு பேருந்து நிலையத்தில் கடைசியாக மார்ச் 22ம் திகதி...
தமிழகத்தில் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மரணமடைந்த பிரித்தி என்ற மாணவி 600க்கும் 471 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கோயம்புத்தூரின் சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சிட்டி பாபு, இவரது மனைவி புவனேஸ்வரி, கூலித் தொழிலாளியான இவருக்கு பிரித்தி என்ற மகள் இருக்கிறார். சிறு வயதிலேயே எலும்புருக்கி நோயால் அவதிப்பட்டு வந்த பிரித்தி படிப்பில் படுசுட்டி. இவர்கள் ஊரிலேயே உள்ள மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார், பிரித்தியால் நடக்க முடியாது என்பதால் புவனேஸ்வரி...
ஈரோடு மாவட்டத்தில் 63 வயதில் மூதாட்டி ஒருவர் பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். 73 வயதில் இவரது கணவர் தந்தையாகியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, கிருஷ்ணன் தம்பதிக்கு திருமணமாகி 42 ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு இல்லை. இது அவர்களுக்கு மனவேதனையை அளித்துள்ளது. பழனி, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டுவரும் தனியார் கருத்தரிப்பு மையத்தை அணுகிய செந்தமிழ்ச்செல்விக்கு செயற்கை முறை கருத்தரித்தலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை மூலம் கருவுற்ற 63 வயதான...