Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
இறந்து கிடந்த பிரபல பேஷன் டிசைனர் இந்திய தலைநகர் டெல்லியில் பிரபல பேஷன் டிசைனர் மாலா லகானியும் அவரது உதவியாளரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடை தைத்துக் கொடுத்த பணத்தை மாலா கொடுக்காததால் அவரிடம் பணியாற்றிய தையல்காரர் இந்த கொலையை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தெற்கு டெல்லியில் வசந்த் குஞ்ச் பகுதியில் வசித்து வந்தவர் மாலா லகானி (53). பிரபல ஆடை வடிவமைப்பாளரான அவர், புதுமையான...
திடுக்கிடும் சம்பவம் ஹரியானாவில் மனைவியை கொன்ற கணவனுக்கு அவரது கள்ளக்காதலி மூளையாக இருந்தது தெரியவந்துள்ளது. ஹரியானாவின் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் தீபிகா, வங்கியில் பணிபுரிகிறார். தன்னுடைய கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 27ம் திகதி தன்னுடைய குடியிருப்பின் 8வது மாடியிலிருந்து விழுந்து பலியானார், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தீபிகாவின் கணவர் விக்ரம் சிங்கை கைது செய்து...
4 வயது சிறுவன் சவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் இந்தியாவுக்கு திரும்பி கொண்டிருந்த 4 வயது சிறுவன நடுவழியிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த யாழ்யா புதியபுரையில் (4) என்ற சிறுவன் தனது குடும்பத்தாருடன் புனித பயணமாக சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு சென்றுள்ளார். பின்னர் குடும்பத்தாருடன் விமானத்தில் இந்தியாவுக்கு திரும்பி கொண்டிருந்தான். விமானம் கிளம்பிய 45 நிமிடத்தில் சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டது. பின்னர் உடல்நிலை மோசமாக தாயின் மடியிலேயே...
காதலியின் செயல் இந்ததோனேசியாவில் ஜாவா கடலில் 189 பயணிகளுடன் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 189 பேரும் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் பயணித்த தனது வருங்கால கணவன் இறந்துவிட்டதால், திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் மணமகள் போல உடை அணிந்து இன்ஸ்டாகிராமில் மணமகள் பதிவிட்ட புகைப்படம் வைரலாகி உலக மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவைச் சேர்ந்த இண்டன் சீரி என்ற மருத்துவருக்கும், ரியோ நந்தா என்ற பெண்மணிக்கும் நவம்பர் 11 ஆம் திகதி...
மாணவியின் உருக்கமான கடிதம் திருச்சி மாவட்டத்தில் நர்ஸிங் படித்து வந்த மாணவி விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜென்சிபிரியா என்ற மாணவி நர்ஸிங் படித்து வருகிறார். இவருக்கு இரவு நேர பணி வழங்கப்பட்டிருந்தது. பணி முடிந்து வீடு திரும்பிய இவர் தூங்கியுள்ளார். வெகுநேரம் ஆகியும் இவர் எழுந்திருக்காத காரணத்தால், பதறிய பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், மாணவி ஏற்கனவே உயிரிழந்து...
பாலியல் வன்கொடுமை தமிழகத்தில் தீபாவளி விடுமுறைக்கு வந்த 12-ஆம் வகுப்பு மாணவியை இரண்டு பேர் சேர்ந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததில், அந்த பெண் இறந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், உண்மையில் என்ன நடந்தது என்பதை மாணவியின் வீட்டிற்கு ஆறுதல் சொல்லச் சென்ற திருநங்கை கிரேஸ் பானு கூறியுள்ளார். தர்மபுரி சிட்லிங் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை, மலர் தம்பதியரின் மகள் செளமியா(17). இவரது வீட்டில் கழிப்பறை இல்லை. இந்நிலையில் மாணவி...
திடுக்கிடும் பின்னணி தமிழகத்தில் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் ஆத்திரம் அடைந்த தொழிலாளி தனது மனைவி, மாமியாரை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். கோவை அருகே உள்ள போத்தனூரை சேர்ந்தவர் பாபு (48). இவர் மனைவி சுமதி (42). தம்பதிக்கு குழந்தை இல்லாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தி அடைந்த சுமதி, பாபுவை பிரிந்து அதே பகுதியில் உள்ள தனது தாய்...
குவியும் பாராட்டுக்கள் இந்தியாவில் அமைச்சராக பணியாற்றிய அனந்த்குமார் என்பவர் இறந்த அன்றும் அவர் மனைவி தனது தொண்டு நிறுவனம் மூலம் வறுமையால் வாடும் குழந்தைகளுக்கு உணவை அளித்துள்ளார். மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக இருந்த அனந்த்குமார் புற்றுநோய் பாதிப்பு காரணமாக கடந்த 12-ஆம் திகதி உயிரிழந்தார். பெங்களூரை சேர்ந்த அனந்த்குமார் தனது மனைவி தேஜஸ்வினியுடன் சேர்ந்து அடம்யா சேதனா பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்நிறுவனம் மூலம்...
அதிரவைத்த புகார் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) பின்னி பன்சால் தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பின்னி பன்சால்மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்த சம்பவம் பிளிப்கார்ட் நிறுவனத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான அந்த பெண் 2016-ம் ஆண்டு பின்னி பன்சால் தன்னிடம் பாலியல்...
அரங்கேறிய கொடூரம் இந்தியாவில் இளம்பெண் தாழ்ந்த சாதி நபரை திருமணம் செய்து கொண்டதால் பெண்ணின் குடும்பத்தார் அவருக்கு இறுச்சடங்கு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் போரி கிராமத்தை சேர்ந்தவர் குசும் (20). இவர் சில தினங்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து காணாமல் போனார். இதையடுத்து குடும்பத்தார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று குசும் தனது காதலனான நானு டங்கி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதை அவர் குடும்பத்தார்...